Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

90 நாட்களில் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அதிரடி

90 நாட்களில் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு:  ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அதிரடி
, புதன், 30 மே 2018 (07:53 IST)
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேல் அவர்கள் பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வரப்படுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பழனி கோவிலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான் என்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.
 
இந்த நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் சுமார் 60 வருடங்களுக்கு முன் திருடு போன நிலையில் இந்த சிலைகள் தற்போது குஜராத்தில் மீட்கப்பட்டது
 
webdunia
இந்த சிலைகள் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த சிலைகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீட்கப்பட்ட சிலைகள் ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என தகவல்கள் கூறுகின்றன. இன்னும் தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான சிலை பொக்கிஷங்கள் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கு கடத்தப்பட்டதாக கூறப்படுவதால் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் குழு அனைத்து சிலைகளையும் மீட்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்