Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:39 IST)
அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000  வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இதுவரை அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சமீபத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான டோக்கன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுபு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகைக்கு மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments