Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
, வெள்ளி, 17 ஜூன் 2016 (14:14 IST)
பழனிமலை முருகன் கோவிலில், ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் மட்டும் அல்லாது, இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றது பழனிமலை முருகன் கோவில். அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் பழனி  முருகன் போற்றப்படுகிறது.
 
இதனால், இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, மலை மீது சென்று வர, மின் இழுவை ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 
ரோப் கார் பாதுகாப்பு கருதி ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் சேவைப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படும். பின்பு, வழக்கம் போல் இயக்கப்படும். இம்முறை, கடந்த மாதம் 8 ஆம்  தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இயந்திரம் பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கங்களுடன் செல்பி எடுத்து வம்பை விலைக்கு வாங்கிய ரவீந்திர ஜடேஜா