Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரைமுருகனின் பண்ணை வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி… விசாரணையில் ருசிகர சம்பவம்!

துரைமுருகனின் பண்ணை வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி… விசாரணையில் ருசிகர சம்பவம்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:38 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை முய்ற்சி நடந்தது.

துரைமுருகனுக்கு சொந்தமாக ஏலகிரி மலையில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. அங்கு கடந்த 11 ஆம் தேதி சிலர் கொள்ளை அடிக்க முயல, அங்கு பணம் மற்றும் நகை எதுவும் இல்லை என்பதால் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் எடுத்து சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணையை தொடங்கினர்.

அருகில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்த்த போது அவர்கள் வீட்டிலும் கொள்ளை அடிக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கும் பணம் எதுவும் கிடைக்காத விரக்தியில் லிப்ஸ்டீக்கால் ‘நூறு ரூபா கூட வைக்க மாட்ட’ என எழுதி சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் திரும்ப பெறப்படும்! – ஜோ பிடன் முடிவு!