Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடகு கடையில் கொள்ளை: கேமிராவில் பதிவான கொள்ளை கும்பலின் தாக்குதல்

அடகு கடையில் கொள்ளை: கேமிராவில் பதிவான கொள்ளை கும்பலின் தாக்குதல்
, திங்கள், 25 ஜூலை 2016 (22:42 IST)
சென்னை உத்தண்டி பிரதான சாலையில் உள்ள ஒரு அடகுக் கடையில் கொள்ளை கும்பல் ஒன்று கடையில் உள்ளவரை தாக்கி விட்டு திருடியுள்ளனர். இது கடையில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.



 

 
சென்னை உத்தண்டி பிரதான சாலையில் மனோஜ் குமார் என்பவர் அடகுக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை அவரது தம்பி சுரேஷ் கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நகை அடகு வைக்க வேண்டும் என்று கூறி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
 
சில நிமிடங்களில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலும் 3 பேர் வந்த சுரேஷை சுரேஷை தாக்க, மற்ற 3 பேர் கடையில் இருந்த நகைகளை ஒரு பையில் போட்டுள்ளனர்.
 
சுரேஷின் சத்தம் கேட்டு மற்ற கடைக்காரர்கள் மற்றும் பொது மக்கள் கூடியுள்ளனர். பொதுமக்கள் கூடியதை அடுத்து கொள்ளை கும்பல், நகைகளை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
 
இதுகுறித்து காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அடகுக் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்யையடிக்க வந்த 6 பேரின் உருவங்களும், மோட்டார் சைக்கிள் எண்களும் பதிவாகி உள்ளன. அதை வைத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்ற அவமதிப்பு - விஜய் மல்லையாவுக்கு நோட்டிஸ்