Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீர் விஐபிகளாக மாறிய ஆர்.கே.நகர் வாக்காளர்கள். பணமழை பெய்ய வாய்ப்பு

திடீர் விஐபிகளாக மாறிய ஆர்.கே.நகர் வாக்காளர்கள். பணமழை பெய்ய வாய்ப்பு
, வியாழன், 9 மார்ச் 2017 (22:11 IST)
பொதுவாக ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியே இரண்டாக பிளந்துள்ளதால் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி கணிக்க முடியாத நிலையில் உள்ளது.


 


அதிமுக சசிகலா அணி , அதிமுக ஓபிஎஸ் அணி, தீபா அணி, திமுக, மக்கள் நல கூட்டணி என பல்வேறு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே நகரில் திடீர் திடீரென பேனர்கள் முளைத்துள்ளது. வாக்காளர்கள் விஐபிகளாக கருதப்படுகின்றனர். இந்த தேர்தலில் தீபா போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிமுக சசிகலா அணி பணத்தை அள்ளி வீசும் என்றும் குறிப்பாக டிடிவி தினகரன் போட்டியிட்டால் பணமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் செய்த முதல் தவறு இதுதான். தினகரனின் முதல் மேடை பேச்சு