Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் நடத்த போன இடத்தில் கலவரம்! – எடப்பாடியார் – ஓபிஎஸ் அணியினர் மோதல்!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:51 IST)
58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஒபிஎஸ் அணி - இபிஎஸ் அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இணைந்து உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து தேவர் சிலை வரை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகளும், ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஊர்வலமாக நடந்த போது., ஒபிஎஸ், இபிஎஸ் அணி நிர்வாகிகளிடையே யார் முதலில் செல்வது என ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலகிவிட்டு தனித்தனியே ஊர்வலத்தில் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி.! ராஜ்நாத் சிங் மற்றும் ராகுல் காந்தி இரங்கல்..!!

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments