Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கட்டாய ஓய்வு தகவல் உண்மையில்லை”.. தமிழக அரசு விளக்கம்

Arun Prasath
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (09:03 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களில் 50 வயது நிறைவு பெற்றவர்களின் விவரங்களையும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களின் விவரங்கள் குறித்தும் வேலை வாய்ப்பு இயக்குநரகம் சார்பில் கேட்கப்பட்டது. இதனை கொண்டு 50 வயது நிறைவு பெற்றவர்களுக்கும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கவே இவ்வாறு தகவல் கேட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, அரசு ஊழியர்களின் சுகாதாரம் குறித்த புள்ளி விவரங்களுக்காகவே இந்த தகவல் கேட்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும் கட்டாய ஓய்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு குறித்து ஆணையிட வேலை வாய்ப்பு துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments