Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை – நாய் முகமுடி அணிந்து மனு கொடுத்த சிறுவன்

தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை – நாய் முகமுடி அணிந்து மனு கொடுத்த சிறுவன்
, செவ்வாய், 29 மார்ச் 2022 (23:41 IST)
கரூரில் ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்கள் – சிறுவர்களை நாய் கடித்து வரும் நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை – நாய் முகமுடி அணிந்து மனு கொடுத்த சிறுவன் மற்றும் பெற்றோர்.
 
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தேர்தலையும் சந்தித்து திமுக மேயராக கவிதா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையாக திமுக பிடித்தது. இந்நிலையில், பொறுப்பேற்றது முதல் இன்றுவரை ஏற்கனவே போடப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஒரு புறம் இருக்க, தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித்திரிவதால், வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்து வரும் நிலையில், அவ்வழியாக நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் கடித்து வரும் நிலை தொடர்கின்றது. கரூர் காமராஜபுரம் மேற்கு பகுதியினை சார்ந்தவர் ராஜேஸ் கண்ணன், இவர் சமூக நல ஆர்வலரும், ஏற்கனவே நடந்து முடிந்த நகரமைப்பு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டவரும் ஆவார். இந்நிலையில், இவரது மகன், அதீதன் (வயது 7) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வளர்ப்பு நாயும், தெருநாயும் சேர்ந்து கடித்துள்ளது. கடந்த 26 ம் தேதி கடித்த நிலையில், அந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இனிமேல், இந்த சிறுவனை போல், மற்ற சிறுவர்கள் யாரும் பாதிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், சிறுவனின் தந்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த சிறுவன் கை பட நான், அதீதன், நாய்கள் கட்டி போடுங்க , ரொம்ப கடிக்குது பயமா இருக்கு அத்தை என்று மேயருக்கு கடிதம் அளிக்க மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். கூடவே தந்தை ராஜேஸ் கண்ணனும் டைப் செய்து தனது கோரிக்கையாக வைத்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போது, அவர், ராஜேஸ் கண்ணாவினை மட்டும் அனுமதித்துள்ளார். ஆனால், தெருநாயின் புகைப்படத்தினை முகமுடியாக அணிந்து மனு கொடுத்த அச்சிறுவனை உள்ளே அனுமதிக்காத நிலையில், கோபமடைந்த அந்த சிறுவன் அவருடைய கைப்பட எழுதிய மனுவினை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே மீண்டும் ஒரு பஞ்சாயத்தா ?