Publish Date: Tue, 09 Nov 2021 (18:38 IST)
Updated Date: Tue, 09 Nov 2021 (18:41 IST)
பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் உணவின்றிப் பசியுடன் உள்ளனர். இதனால் கனமழையால் பாதித்துள்ள மக்களுக்கு அரசு ரூ.2000 நிதியுதவி அளித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சென்னை,. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
.இந்நிலையில், தமிழக முதல்வரும் அமைச்சர்களும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கனமழையால் தவிக்கும் மக்களுக்கு ரூ .2000 கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.