Publish Date: Sun, 24 Oct 2021 (10:00 IST)
Updated Date: Sun, 24 Oct 2021 (10:57 IST)
தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது.
கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம் என்ற நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு.
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும் - தமிழ்நாடு அரசு.
நவம்பர் 1 முதல் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி; அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.