சிறையில் இருக்கும் கைதிகளை சந்திக்க தடை – தமிழக அரசு உத்தரவு !

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (10:28 IST)
தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக சம்மந்தமான நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்களை எங்கும் கூட்டமாகக் கூடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் சந்திக்க இரண்டு வாரக் காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள், காவலர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சோப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments