Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (14:51 IST)
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று  மிக அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இன்று   கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 
நாளை  நீலகிரிக்கு மீண்டும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை தொடரும். அத்துடன், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments