Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையில் 454 கோடிக்கு மது விற்பனை.. பரபரப்பு தகவல்..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (08:46 IST)
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மூலம் மது விற்பனை நடந்து வரும் நிலையில், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிக அளவு மது விற்பனையாகி வருகிறது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று 155.85 கோடி ரூபாய்க்கும், 14ஆம் தேதி பொங்கல் தினத்தில் 268 கோடி ரூபாய்க்கும் மொத்தம் சுமார் ரூ.454 கோடி விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டும் 450 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கிட்டத்தட்ட அதே அளவு தான் இந்த ஆண்டும் விற்பனை ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments