மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி !!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (22:30 IST)
நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்  தலைமையில் எடுக்கப்பட்டது.
 
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில்   நேற்று முன் தினம்  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்  தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.
 
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
 
நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  தண்டாயுதபாணி, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments