Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏடிஎம்களில் இனி ரூ.10000 வரை எடுக்கலாம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஏடிஎம்களில் இனி ரூ.10000 வரை எடுக்கலாம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
, திங்கள், 16 ஜனவரி 2017 (17:26 IST)
ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் இனி ரூ.10000 வரை எடுத்துக்கொள்ளலாம்.


 

ரூ.500,2000 ரூபாய் புதிய தாள்கள் வெளியிட்டதை அடுத்து, ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது நாளொன்றுக்கு ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று நடப்பு கணக்கில் வாரத்திற்கு இதுவரை ரூ.50,000 வரை எடுக்கலாம் என்ற நிலையிலிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. இதன்மூலம் பொதுமக்கள் வங்கிகளில் காத்திருக்கும் சூழ்நிலை குறைய வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. தீபா புதிய கட்சி குறித்து இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு: ஆதரவாளர்கள் திரண்டனர்!