Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு இரண்டே மாதத்தில் சகஜ நிலை அடையும்! – ஆர்பிஐ முன்னாள் ஆளுனர் நம்பிக்கை!

தமிழ்நாடு இரண்டே மாதத்தில் சகஜ நிலை அடையும்! – ஆர்பிஐ முன்னாள் ஆளுனர் நம்பிக்கை!
, திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:02 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பொருளாதார மந்த நிலை அடைந்துள்ள நிலையில் விரைவில் அது சரியாகும் என ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததுடன், பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்துள்ளது தமிழ்நாடு.

இந்நிலையில் தமிழக பொருளாதார நிலை குறித்து பேசியுள்ள ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் “தமிழகத்தில் 2020-21க்கான பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் என கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள அதே சமயம் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில நாட்கள் கேப் விட்டு மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!