Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சராகிறாரா ரவீந்திரநாத்? டெல்லியில் இருந்து வந்த அழைப்பு...

Webdunia
வியாழன், 30 மே 2019 (13:08 IST)
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க  வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரராத்திற்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
எனவே, பாஜக அமைச்சரவையில் அதிமுக சார்பில் மத்திய அமைச்சராக ரவீந்திரநாத் இருக்க கூடும் என இந்த தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், ரவீந்திரநாத் மத்திய அமைச்சராவதில் எடப்பாடி பழனிச்ச்சாமிக்கு உடன்பாடு இல்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. மூத்த தலைவர் வைத்தியலிங்கம் மத்திய அமைச்சராவார் என்றே எதிர்பார்ப்புகள் இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments