Publish Date: Wed, 20 Sep 2023 (15:35 IST)
Updated Date: Wed, 20 Sep 2023 (15:37 IST)
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதிரை நடிகை மகாலெஷ்மியின் கணவர் ரவீந்தர் ஜாமீன் மனு மீதான உத்தரவை 25ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது
பல்வேறு உடல் நிலை பிரச்சினை உள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், பணத்தைத் திருப்பி செலுத்தத் தயாராக ரவீந்தர் உள்ளார் என்றும் அவரது தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ரவீந்தர் மீதான விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் ரவீந்தர் ஜாமீன் மனு மீதான உத்தரவை 25ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது