Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆய்வுக்கு வந்த அதிகாரி; அதிர்ச்சியில் இறந்த ரேசன் கடை ஊழியர்! – அரியலூரில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:46 IST)
அரியலூரில் ரேசன் கடையை ஆய்வு செய்ய அதிகாரி வந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் புதுச்சாவடி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல கடையில் ரேசன் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது ஆய்வு நிமித்தம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தீபா அந்த ரேசன் கடைக்கு சென்றுள்ளார்.

ஆய்வு செய்ய அதிகாரி வருவதை பார்த்த பழனி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments