Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலம் போட்டு கைதான பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (10:14 IST)
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சமீபத்தில் சென்னையில் கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு இருபப்தாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக ஒருசில கல்லூரி மாணவிகள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ’ கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை. அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து இது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.
 
மேலும் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே என்றும், இவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments