Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதனால்தான் சுவாதியை கொலை செய்தேன் : ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

இதனால்தான் சுவாதியை கொலை செய்தேன் : ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்
, ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:18 IST)
சுவாதியை படுகொலை செய்த ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார் என தெரியாமல் காவல்துறை தடுமாறியது. 
 
இந்த நிலையில், கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறைக்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து, நெல்லையில், ராம்குமார் எந்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது, திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனையைடுத்து, பாளையங்கோட்டை ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மயக்கம் தெளிந்த ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் “சுவாதியை நான் காதலித்தேன். ஆனால் அவர் என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை உதாசீனப்படுத்தி பேசினார். மேலும் என் தோற்றம் பற்றி இழிவாக பேசினார். தேவாங்கு போல் இருக்கும் நீ என்னை காதலிக்கிறாயா என்று கோபமாக பேசினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரின் வாயில் வெட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் கொலையில் முடிந்துவிட்டது” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி கொடூரமாக கொலை