Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதியை பின்தொடர்ந்தது ராம்குமார் இல்லை: உண்மையை கூறும் ஜனனி!

சுவாதியை பின்தொடர்ந்தது ராம்குமார் இல்லை: மர்மத்தை உடைக்கும் ஜனனி!

சுவாதியை பின்தொடர்ந்தது ராம்குமார் இல்லை: உண்மையை கூறும் ஜனனி!
, வியாழன், 13 ஜூலை 2017 (12:50 IST)
தமிழகத்தையே உலுக்கிய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் மர்மமான முறையில் இறந்தார் ராம்குமார். ராம்குமார் எப்படி இறந்தார் என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கை கூட வெளியிடப்படாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.


 
 
சுவாதியை பின் தொடர்ந்தது ராம்குமார் தான் என கூறப்பட்ட நிலையில், சுவாதியை ராம்குமார் பின் தொடரவில்லை என இந்த வழக்கில் சாட்சியாக இருந்த ஜனனி பிரபல தமிழ் வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
 
சுவாதியின் வீட்டுக்கு பக்கத்து தெருவில் அதே சூளைமேட்டில் தான் வசித்து வந்தார் ஜனனி. ஒரு நாள் சுவாதியும், ராம்குமாரும் சிரிச்சுக்கிட்டு, கேஷுவலாக பேசிக்கிட்டு போனதை பார்த்தேன். உங்க கம்பெனியில் வேலை கிடைக்குமா என ராம்குமார் கேட்டதாகவும், அதற்கு சுவாதி கிடைக்காது என கூறியதாகவும் ஜனனி கூறுகிறார். 
 
சுவாதியை ராம்குமார் மட்டுமே பின் தொடரல. ஒருநாள் வேறு ஒரு பையனும் பின் தொடர்ந்ததை பார்த்திருக்கிறார் ஜனனி. இந்த கொலையில் யாரையோ போலீசார் மறைக்கின்றனர் என கூறும் ஜனனி தற்போது உயிருக்கு பயந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பிய மாணவிகள்