Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா?

சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா?
, செவ்வாய், 5 ஜூலை 2016 (08:08 IST)
சுவாதி கொலையில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா என தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
ராம்குமாரின் செல்போனில் பதிவாகி உள்ள அனைத்து எண்களுக்கும் காவல் துறையினர் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கூலிப்படை, ரவுடி போன்றவர்களின் எண்கள் உள்ளதா? என்றும் காவல் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை வந்து வேலை தேடுவதற்காக தங்கி இருந்த ராம்குமார், 4 மாதமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஆனால் அவர் தங்கியிருந்த இடத்துக்கு மட்டும் மாத வாடகை தவறாமல் கொடுத்து வந்துள்ளார். மேலும் இஷ்டத்துக்கு செலவு செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
 
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த ராம்குமார் எப்படி சம்பாத்தியம் இல்லாமல் இஷ்டத்துக்கு செலவு செய்ய முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டதால், ராம்குமாருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதனால் அவருக்கு அந்த பணம் எப்படி வந்தது? என்றும் விசாரணை நடக்கிறது. வீட்டில் இருந்து அவரது செலவுக்கு குறைந்த அளவிற்கே பணம் கொடுத்துள்ளனர். இதனால் அவர் வேறு ஏதேனும் தவறான வழிகளில் பணம் சம்பாதித்தாரா? ரவுடி மற்றும் செயின் பறிக்கும் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஸ் மோதி யானை உயிருக்குப் போராட்டம்