Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுகுன பழத்தை குடுத்த கருணாநிதி ஏமாத்திட்டார்! – ராமதாஸ் ட்வீட்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:51 IST)
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கேட்டு வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவினர் வன்னியர் பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு கோரி வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் கடந்த மாதம் நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்!” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments