Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசியகீதம் இசைக்கப்படும்போது சுவாமிகள் ஏன் தியானம் செய்யவில்லை!

தேசியகீதம் இசைக்கப்படும்போது சுவாமிகள் ஏன் தியானம் செய்யவில்லை!
, புதன், 24 ஜனவரி 2018 (16:23 IST)
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து மரியாதை செய்யாமல் இருந்து விட்டு, தேசிய கீதம் பாடியபோது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த காஞ்சி சங்கர மடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் வழக்கம் இல்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாகவும், அதனால் தான் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் கூறியது.
 
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தேசிய கீதம் இசைக்கப்படும்போது விஜயேந்திரர் ஏன் தியானம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது வேண்டும் என்றே அவமதித்தது என்றும் இனிவரும் காலங்களிலாவது விஜயேந்திரர் போன்றவர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த தமிழ்தாய் வாழ்த்து பஞ்சாயத்து : கரூர் அதிமுக விழாவில் பரபரப்பு