Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்… ராமதாஸ் அறிவிப்பு!

மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்… ராமதாஸ் அறிவிப்பு!
, செவ்வாய், 15 ஜூன் 2021 (12:47 IST)

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது சம்மந்தமாக இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல. மது ஆலைகளின் நலனுக்கான அரசுதான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் குடும்பங்களில் மீதமுள்ள உடமைகளையும் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்கவே முடியாததாகும். உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல். அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல் முடக்குவது ஆகும். இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு உண்டு.

அதனால், குறைந்தபட்சம் கரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் வரையிலாவது மதுக்கடைகள்  மூடப்பட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறந்து மிகப்பெரிய தீங்கை இழைத்திருக்கிறது திமுக அரசு. மதுக்கடைகளைத் திறந்திருப்பது குடும்பங்களையும் சீரழிக்கப் போகிறது. கரோனாவையும் பரப்பப் போகிறது என்பது முதல் நாள் நிகழ்வுகளிலிருந்தே உறுதியாகிவிட்டது. மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால்மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.

பெரும்பான்மையான கடைகளில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும், சில கடைகளில் இரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான தொலைவுக்கும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி அருந்தினார்கள். அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் கூட இல்லை. மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும்தான் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மூக்குக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தனர். மது வாங்க வந்திருந்த எவருக்கும் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படவில்லைமதுக்கடைகள் கரோனா மையங்களாக மாறுவதற்கு இந்தக் காரணங்களே போதுமானவை. ஆனால், அதைப் பற்றி அரசும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுக்கடைகளுக்கு வந்தவர்களை எல்லாம், வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வந்தவர்களைப் போல வரவேற்று, 5 மணிக்குள் மதுக்கடை வளாகத்திற்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற அனைவருக்கும் மதுப்புட்டிகள் வழங்கப்பட்டன. இந்த அளவுக்கு பொறுப்புணர்வு அரசு நிர்வாகத்தில் காட்டப்பட்டிருந்தால் தமிழகம் எப்போதோ முதன்மை மாநிலமாக உயர்ந்திருக்கும். மதுக்கடைகளைத் திறக்க நேரிட்டது குறித்து முதல்வர்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு!