Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாவை காட்டினா போதுமா? மூல பத்திரம் எங்கே? – ஸ்டாலினுடன் தொடர் மோதலில் ராமதாஸ்

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (12:51 IST)
திமுகவின் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில்தான் என்று குற்றம் சாட்டிய ராமதாஸ் அந்த இடத்தில் அதற்கு முன்பு என்ன இருந்தது என்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் பட்டா புகைப்படத்தை பகிர்ந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அது வழிவழியாக தனியாருக்கு சொந்தமானது என்றும், ராமதாஸ் பச்சையாக புளுகுகிறார் என்றும் பதிவிட்டார். மேலும் ‘முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என நிரூபிக்க தவரும் பட்சத்தில் ராமதாஸ் அரசியலில் இருந்து விலக தயாரா?” என சவால் விட்டார் ஸ்டாலின்.

அதற்கு எதிர்வினையாற்றிய ராமதாஸ் “1985ம் ஆண்டு பட்டாவை காட்டியிருக்கிறீர்கள். மூல பத்திரத்தை காட்டுங்கள்” என கூறியுள்ளார். மேலும் முரசொலி அலவலகம் இருக்கும் இடத்தில் முன்னதாக ஆதிதிராவிடர் நல விடுதி இருந்ததாகவும் அதை ஆக்கிரமித்து திமுக முரசொலி கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இரு கட்சி தலைவர்களிடையே நடைபெறும் இந்த வாக்குவாதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments