Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

Mahendran
சனி, 12 ஏப்ரல் 2025 (15:28 IST)
பாமக தலைவர் பதவியில் விவகாரத்தில் நான் முடிவு எடுத்தது எடுத்ததுதான் என்றும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாமக தலைவராக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு, இனிமேல் நானே தலைவர் என டாக்டர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக வட்டாரத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், ராமதாஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
 
மேலும், அவரை சமாதானப்படுத்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை; நான் முடிவு எடுத்தது, எடுத்ததுதான். பாமக தலைமை விவகாரம் குறித்து என்னை யாரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டாம்," என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்ததாகவும் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments