Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜான் கொண்டாட்டம்..! 10 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி! – கலகலக்கும் கோவை!

Prasanth Karthick
வியாழன், 11 ஏப்ரல் 2024 (09:25 IST)
இன்று தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையில் பல இடங்களில் மக்களுக்கு விநியோகிக்க இஸ்லாமிய மக்கள் பிரியாணி தயார் செய்து வருகின்றனர்.



அன்பையும், சகோதரத்துவத்தையும் போற்றும் இஸ்லாமிய பண்டிகையாக ரம்ஜான் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று பெருநாள் கொண்டாடி இருந்தாலும், தலைமை காஜி அறிவிப்பின்படி பெரும்பான்மை மக்கள் இன்று பெருநாளை கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் சிறப்பு கூட்டுத் தொழுகை பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ALSO READ: தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து கொண்ட மாமியார் - மருமகன்.. எதிரெதிர் துருவத்திலும் சுவாரஸ்யம்..!

கோவையில் போத்தனூர், உக்கடம், கோட்டைமேடு என பல பகுதிகளில் மக்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி தயார் செய்யும் ஏற்பாடுகள் அதிகாலையே தொடங்கி ஜரூராக நடந்து வருகிறது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கேசரி, அல்வா என பலவகை உணவுகளும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டு வருவதாக இஸ்லாமிய மக்கள் தெரிவித்துள்ளனர். பிரியாணிக்காக காலையிலிருந்தே மக்கள் பலரும் அப்பகுதியில் காத்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments