Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: வெற்றி திமுகவிற்கே!!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:46 IST)
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு. 
 
கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால்  மாநிலங்களவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 15 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 22 என விரிவாக தலைமை தேர்தல் ஆணையம் தகவ வெளியிட்டுள்ளது.
 
ஆனால், தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments