Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!

பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் மன்ற நிர்வாகிகளின் மீதுள்ள புகார்களை கண்காணிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ரஜினிகாந்த் தனது புதிய பொறுப்பாளர்களான அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் மீதான புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அறிவுறுத்தியுள்ளாராம். அவர்கள் விசாரித்து நிலவரத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பெருசு தீப்பெட்டி இருந்தா குடு!" – அப்பாவி முதியவரிடம் தீப்பெட்டி வாங்கி அவரையே கொளுத்தி கொன்ற கும்பல்!