Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள்: ரஜினி புகழாரம்

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (11:40 IST)
காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா கையாண்ட விதம் குறித்து கமல்ஹாசன் உள்பட பல கோலிவுட் திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்பார்த்தது போலவே அமித்ஷாவின் காஷ்மீர் குறித்த அதிரடி நடவடிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
 
'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது ஆகும். மேலும் நாடாளுமன்றத்தில் அமித்ஷா அவர்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள்' என்று கூறினார்.
 
மேலும் வெங்கையா நாயுடு மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்றும், அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றும் ரஜினிகாந்த் அவருக்கு புகழாராம் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments