Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்த அமித்ஷா: இரவு நேரத்தில் சென்று சந்தித்த முதல்வர்

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (11:05 IST)
சென்னைக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது இரண்டு வருடகால பணி அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னைக்கு வந்தார் அமித்ஷா.

அவரை முதல்வர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர். அமித்ஷா ஆளுனர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவில் தனியாக சென்று சந்தித்தார்.

இருவருக்குமிடையே 20 நிமிடங்கள் வரை உரையாடல் தொடர்ந்தது. அதில் என்ன பேசி கொண்டார்கள் என்ற அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை. ஆனால் அதிமுக கட்சி உட்பூசல் விவகாரங்கள் குறித்து முதல்வர் பேசியிருக்கலாம் என எதிர்தரப்பினர் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை உடனடியாக பெறுவது, அண்டை மாநிலங்களுடனான சமரச போக்கு ஆகியவற்றை குறித்து அவர் பேசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments