Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: சரத்குமார்

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:04 IST)
ஸ்டெர்லைட் போராட்டாம் குறித்தும் போராட்டக்காரர்கள் குறித்தும் நேற்று தூத்துகுடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நடிகரும் அகில இந்திய சமத்தூவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
 
போராட்டக்காரர்களிடையே சமூக விரோதிகள் ஊடுருவி போலீசை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாகவும், அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று தூத்துகுடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறினார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
 
இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் சரத்குமார், ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியது கண்டனத்துக்குரியது. அவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சற்றுமுன் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியுள்ளார் 
 
சரத்குமாரின் இந்த பேட்டிக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments