Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்கு நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி: கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு?

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (07:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர்களை சந்திக்க இருக்கும் நிலையில் அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு அவருக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.
 
புதிய கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே அரசியல் வருகை குறித்து தனது ரசிகர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என ரஜினிகாந்த் கூறிய நிலையில் இன்று அவர் ஆலோசனைக்குப் பின்னர் தனது தெளிவான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்புக்கு இன்று தான் கடைசி நாளாக இருக்கும் என்றும் இன்று அவர் அரசியல் குறித்த அறிவிப்பை ஒருவேளை வெளியிடவில்லை என்றால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments