Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் நல்ல மனிதர், அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்: அண்ணாமலை

ரஜினிகாந்த் நல்ல மனிதர், அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்: அண்ணாமலை
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (18:56 IST)
ரஜினிகாந்த் நல்ல மனிதர், அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்
 
ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் தீவிரமாக இறங்கினார். அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அவர் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா அவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ’ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர். . அவர் அரசியலுக்கு வந்து புதுமையான அரசியலை கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் தனிப்பட்ட ஸ்டைலில் அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். அவரை நான் வரவேற்கிறேன் 
 
 
ஆனால் அதே நேரத்தில் அவரிடம் நான் அரசியல் குறித்துப் பேசியது இல்லை. ஆன்மீகம் பற்றி மட்டுமே பேசி உள்ளேன். அவர் அரசியல் கட்சி தொடங்கி தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து விட்டால் அவரை நான் விமர்சனம் செய்ய முடியும். அதுவரை அவரை விமர்சனம் செய்ய மாட்டேன். ரஜினிகாந்த் அரசியலுக்காக தற்போது தயாராகி வருகிறார். விரைவில் கண்டிப்பாக வருவார்’ என்று அண்ணாமலை அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா!