Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? அறிக்கை கேட்கும் தலைமை தேர்தல் அதிகாரி!

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:08 IST)
நேற்று தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதியிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் வாக்களித்தனர்
 
இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பதிவு செய்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் முண்டியடித்தனர். அந்த சமயத்தில்  ரஜினிக்கு தேர்தல் அதிகாரி இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக வலது கை விரலில் மை வைத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையானது
 
இதுகுறித்து பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விளக்க அறிக்கை கேட்கப்படும். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments