Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன தான் சாக்குபோக்கு சொன்னாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (07:56 IST)
பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிய எஸ்.வி சேகர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிய எஸ்.வி சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எஸ்.வி.சேகர் என்ன தான் இதற்கு விளக்கம் அளித்தாலும் அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார். 
மேலும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் விசாரணையில் குற்றம் நிரூபனமானால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். 
 
உங்கள் மீது அதிக விமர்சனங்கள் வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது என ரஜினி பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments