Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் புதைக்க வேண்டும். ரஜினியின் அரசியல் குறித்து தமிழருவி மணியன்

2 திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் புதைக்க வேண்டும். ரஜினியின் அரசியல் குறித்து தமிழருவி மணியன்
, திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (00:43 IST)
காந்திய மக்கள் இயக்கத்தின் பிரமாண்டமான கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. ரஜினியின் ரகசிய உத்தரவுக்கு இணங்க இந்த கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், 'இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் கொண்டு புதைக்கவேண்டும் என்றும், ரஜினியை முதல்வராக்குவதே தனது முதல் பணி' என்றும் கூறினார்.



 
 
'கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. ரஜினிகாந்தை தமிழகம் தவறவிட்டால் மக்கள் வாழ வழியில்லாமல் போகும். ரஜினிகாந்த் தூய்மையான அரசியல் செய்யப் புறப்பட்டுவிட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் அமரும் நாள்வரும். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் கொண்டு புதைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். 
 
வைகோ முதல்வராக வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், தற்போது அவருக்கு போதுமான வாக்கு வங்கி இல்லை. அரசியல் குறித்த முடிவுக்கு எடுப்பதற்கு முன்னதாகவே ரஜினிகாந்துக்கு 25 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அவர் அரசியல் வியூகம் அமைத்தால் 45 சதவீத வாக்கு வங்கி அமையும்' 
 
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் மோதி பறந்த பெண்; மனதை பதறவைக்கும் வீடியோ