Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் போல் டாஸ்மாக் கடைகளை மூட உதயநிதி கையெழுத்து வாங்குவாரா? ராஜேஸ்வரி கேள்வி..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (15:35 IST)
நீட் தேர்வு ரத்து செய்ய ஒரு கோடி நபர்களிடம் கையெழுத்து வாங்குவது போல் ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உதயநிதி நடவடிக்கை எடுப்பாரா என ராஜேஸ்வரி ப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி கையெழுத்தை பெற்று வருகிறார்.  முதல் கையெழுத்தாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். 100 நாட்களில் ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மார்க் கடைகளை மூட வலியுறுத்தினால் அவரது அப்பாவிடம் சொல்லி உதயநிதி கடைகளை மூட வைப்பாரா என கேள்வி எழுப்பு உள்ளார். 
 
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பை விட டாஸ்மாக் மது குடிப்பதால் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதையும் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  ராஜேஸ்வரி பிரியாவின் கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments