Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சண்டனா சட்ட கிழியத்தான் செய்யும்: வடிவேலு பஞ்சை மாற்றி அடித்த அமைச்சர்!!

சண்டனா சட்ட கிழியத்தான் செய்யும்: வடிவேலு பஞ்சை மாற்றி அடித்த அமைச்சர்!!
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (14:52 IST)
பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசியுள்ளார். 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.   
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
குறிப்பாக தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசுகையில், புயல் ஏற்பட்டால் மரங்கள் சாய்வது போல பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும். எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமை உள்ளது என்பதை போல இந்திய மக்கள் கொரோனாவை எதிர்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை சுற்றி சிவப்பு தக்காளிகள்: மழைக்கு கேரண்டி கொடுக்கும் வெதர்மேன்!!