Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் கட்சியில் சேர்ந்தா மாலையில் வேட்பாளர்! – சாத்தூரில் அமமுக சார்பில் ராஜவர்மன்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:42 IST)
அதிமுகவில் சீட் தராததால் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுக சார்பில் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திரபாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார் ராஜவர்மன். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அமமுக வேட்பாளர்கள் பட்டியலில் சாத்தூர் தொகுதி வேட்பாளராக ராஜவர்மன் அறிவிக்கப்பட்டுள்ளார். காலையில் கட்சியில் இணைந்து மாலையில் வேட்பாளரான இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments