Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் !

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (14:34 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கோடைக் காலம் முடிந்து தென்மேற்குப் பருவகாலம் தற்போது நிலவுவதால் தமிழகத்தில் பல இடங்களில்  லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.
 
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments