Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 24 மணி நேரத்தில் மழை குறையும் : தமிழக வானிலை மையம் அறிவிப்பு

Advertiesment
அடுத்த 24 மணி நேரத்தில் மழை குறையும் : தமிழக வானிலை மையம் அறிவிப்பு
, புதன், 18 மே 2016 (09:55 IST)
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. 


 

 
இதனால், இது புயலாக மாறியதாலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் புயல் காற்று வீசும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
 
சென்னைக்கு தென்கிழக்கில் 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல்) இன்று காலை 5 மணி அளவில் சென்னை அருகே கரையை கடந்தது.
 
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை, அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ்யசபா எம்பி பதவிக்கு அமர் சிங் பெயர் பரிந்துரை