Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்..!

Advertiesment
Chennai Rain

Siva

, செவ்வாய், 30 ஜூலை 2024 (18:11 IST)
நாளைய தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை அதாவது ஜூலை 31ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

120 அடியை எட்டியது மேட்டூர் அணை.! உபரிநீர் வெளியேற்றம்.! வெள்ள அபாய எச்சரிக்கை..!!