Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:17 IST)
இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஆனால், அதே நேரத்தில் பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருக்கும் என்றும், குறிப்பாக இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments