Publish Date: Fri, 02 Jul 2021 (16:19 IST)
Updated Date: Fri, 02 Jul 2021 (16:23 IST)
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், தரும்புரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
எனவே, தற்போது வெயில் கொளுத்திவரும் நிலையில் மழை பெய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.