Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன மழை, திரும்ப வருமா? வெதர் ரிபோர்ட்!!

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (16:42 IST)
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால், இன்று பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையே பெய்தது. 
 
தற்போது தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. இது ஒன்று மேலும் தீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு திடையில் ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
ஆம், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments