உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (09:41 IST)
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும் என தகவல். 

 
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 
ஆம், வங்க கடலில் மத்திய மேற்கு – வட மேற்கு பகுதியில் 11 ஆம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, 
 
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (ஜூலை 11) வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments